பாரதம்
மக்கள் தேடும் புதிய பாரதம் #1 – விழிப்புணர்வு பார்வை
‘இந்தியா பணக்கார நாடு – ஆனால் இந்தியர்கள் தான் ஏழைகள்’ – பொதுவாக இப்படித்தான் நம் நாட்டைப் பற்றி வெளிநாடுகளில் பேச்சு அடிபடுகிறது. இது உண்மையா? ’என்ன வளம் இல்லை இந்த்த் திருநாட்டில்…’ என்ற பிரபலமான பாடல் வரிகளை நினைவுப்படுத்திப் பார்த்தால், கூடவே வேதனைப் பெருமூச்சு தான் நம்மிடமிருந்து வெளிப்படும். வெளிநாட்டு வாழ் இந்தியர்களான நாங்கள் வியாபார நிமித்தமாக உலகம் முழுவதும் சுற்றி வருகிறோம். ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளில் பல இடங்களுக்கும் சென்று வருகிறோம். [...]







